வாழ்க தமிழினம்…

ஏப்ரல் 12, 2012

 

நிலா நிலா ஓடி வா என்கிறது தமிழ்..
rain rain go away என்கிறது ஆங்கிலம்..

அன்பிற்கான ஆதாரமாய்
அம்மாவில் தொடங்குகிறது தமிழ்..

ஆதாம் ஏவாள் தவறுக்கான
ஆப்பிளில் தொடங்குகிறது ஆங்கிலம்..

என்றாலும் நமக்கு நம் பிள்ளைகள்
அம்மா அப்பா என்று அழைத்தால் கோபம்
மம்மி டாடிதான் சந்தோசம்..

வாழ்க தமிழ் மக்கள்..
வளர்க தமிழினம்..

 

.

சொந்த மண்ணில் சொந்த மொழி பேசக் கூசுகிற கேவலம் விரைவில் மாறும் நாள் வரும்.. விடியல் காணும் நாள் வரும்..
.
உயிரென.. மூச்சென.. உயிரையும் மூச்சையும் விட உயர்ந்த உன்னத சுயமென உள்ளே என்னுள்ளே நம்முள்ளே நிறைந்திருக்கும் சுத்தத் தாய்மொழித் திருநாள் வாழ்த்துக்கள்..
.