நடப்பது என்னவென்றே புரியாமல்
நடந்துகொண்டிருக்கிறேன்..
என்னை உரசியபடி
நீ நடந்து வந்துகொண்டிருப்பதால்..
.
நடப்பது என்னவென்றே புரியாமல்
நடந்துகொண்டிருக்கிறேன்..
என்னை உரசியபடி
நீ நடந்து வந்துகொண்டிருப்பதால்..
.
சாவி கொடுத்தால் சொன்னதைச் செய்யும்
பொம்மைப் பறவையோடு
விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு மகள்..
தூரத்தில் கைக் காட்டி
“அப்பா அது மட்டும் நான் சொல்றத கேக்க மாட்டேங்குது..”
எனச் சொல்லும் போது எப்படி புரிய வைப்பது
அது நிஜப் பறவை என்பதை !
.