புணர்ச்சி என்பது
உடல் கரைந்து உயிர் நிறைந்து திளைக்கும்
புனித உணர்ச்சி..
இரண்டு மனங்கள் இணைந்த அன்பின்
உச்சகட்ட கிளர்ச்சி..
காட்டு வெள்ளமாயினும்
பள்ளம் நோக்கித்தான் பாயும்..
மிருகங்கள் கூட
துணை நிலை கண்டே புணரும்..
வெள்ளைத்துளி கொட்ட
விரிசல் கிடைத்தால் போதுமென்றலையும்
இச்சை வெறிகளின்
விந்துப் பை பிய்த்தெடுப்போம்..
பிஞ்சுப் பிள்ளைகளை
பிளந்து தின்னத் துடிக்கும்
காமப் பேய்களின்
உயிர்க் குறியை அறுத்தெறிவோம்..
குழந்தைகளிடம் கடவுளைக் காணாமல்
கலவி காணத் துடிக்கும்
அசுத்தக் கண்களை
ஆயிரம் துண்டுகளாய் கிழித்தெடுப்போம்..
வதை செய்து வன்புணர்வை
வேரோடு எடுத்தெரிப்போம்..
மலரட்டும் மனிதநேயம்..
மணக்கட்டும் பிள்ளைப் பாசம்..
.
கோவையில் கொடியவர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு இறந்த பதினோரு வயது பெண் குழந்தை முஸ்கினுக்கும்.. அவள் தம்பி எட்டு வயது ரித்திக்கிற்க்கும் சமர்ப்பணம்..
.
You must be logged in to post a comment.