தேவையில்லை வார்த்தைகள்…

 

உதடுகள் உச்சரிக்கத் தவிர்க்கின்ற 
உன் உள்ளத்து ஆசைகளையும்
உள்வாங்கி உடனே
நிறைவேற்றிவிடத் துடிக்கும் எனதாசைகள்..

மனதில் நினைத்தது
சொல்லாமலே நிறைவேறிவிட்ட
உனது முக மகிழ்ச்சிக்காகத்தான் அதுவும்..

உண்மைதான்..
சில நேரங்களில் சில விசயங்களுக்கு
வார்த்தைகள் தேவைப்படுவதில்லை..

.

பின்னூட்டமொன்றை இடுக