பிரியம் நிறைந்த மனங்களுக்கு பிரியனின் வணக்கங்கள் !
பிரியன் பக்கங்கள் என்ற தலைப்போடு உயர்ந்துகொண்டிருக்கும் எனது களம் – தமிழுக்கும், கவிதைகளுக்கும், படைப்புகளுக்குமானது…
அஞ்சாதே, காதலில் விழுந்தேன், பந்தயம், ௮..ஆ..இ..ஈ.., தநா அல 4777, ரசிக்கும் சீமானே, நினைத்தாலே இனிக்கும், கதிர்வேல், முன்தினம் பார்த்தேனே, வீரசேகரன், மார்கழி 16, போன்ற…
60 – க்கும் மேற்பட்ட படங்களுக்கும்…
150 – க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும்…
5 – க்கும் மேற்பட்ட ஆல்பங்களுக்கும்…
7 – க்கும் மேற்ப்பட்ட கவிதைத் தொகுப்பு புத்தகங்களுக்கும்…
நிறைய விளம்பர வரிகளுக்கும் இடையில்……….
எனது இரவு தூக்கங்களை மொத்தமாய் கொடுத்து இந்த பக்கங்களை வளர்த்து வருவதற்கு சரியான காரணமுண்டு…
தனது படைப்புகளின் மீதான விமர்சனங்களைக் கொண்டுதான் ஒரு
படைப்பாளி தன் அடுத்த கட்ட பயணத்தின் திசையை தீர்மானிக்கிறான் !
ஒரு படைப்பாளியாக எனது திரைத்துறை நண்பர்களிடம் இருந்தும்… தமிழ் இலக்கியத்துறை நண்பர்களிடம் இருந்தும், பலதரப்பட்ட தளங்களில் இருந்தும் என் படைப்புகள் மீதான கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறேன்…
எல்லாவற்றையும்விட… எனது படைப்புகளை மட்டுமே தெரிந்த… என்னைத் தெரியாத… என் சமூகத்தின்… சராசரி ரசிகனின்… ரசிகையின்… உண்மையான விமர்சனங்களைப் பெறவே நான் விரும்புகிறேன் !
எதிர்பார்த்ததற்கு மேலாக… எனது கவிதைகள் மீதான நிறைவான விமர்சனங்கள் நிறையவே கிடைத்து வருகின்றன ! மகிழ்ச்சி…
நதி போல பயணித்துக்கொண்டே இருப்போம் நமக்கான சுவடுகளை நாளைகளுக்கு விட்டபடி…
பிரியமுடன்…
பிரியன்…
piriyan பதிப்பித்தது. 
piriyan பதிப்பித்தது. 
piriyan பதிப்பித்தது.