முதல் சந்திப்பில்…

 

என்னிடம் பேசுவதற்காக
யோசித்து வைத்திருந்த
அத்தனை வார்த்தைகளையும் மறந்து…

 

உடலுக்குள் மெல்லிய நடுக்கம் பிறக்க…

உயிருக்குள் சில்லென்று புயல் அடிக்க…

இதயம் நான்கு மடங்காய் துடிக்க…

என்ன செய்வதென தெரியாமல்…

 

ஒரு சுகமான பதற்றத்தோடு
எனக்கு முன்னால் வந்து நிற்கிறாய்
நமக்கான முதல் சந்திப்பில்…

பின்னூட்டமொன்றை இடுக