காலத்தால் அழியாப் பாடல் படைக்க.. பாடல் எழுதக் கற்றுக்கொள்ள.. பாடலாசிரியராய் பரிணமிக்க.. படைப்பாளியாய் உயர.. தாளா விருப்பமெனில்.. இந்தத் தகவல் உங்களுக்கானதுதான்..
வார்த்தைச் சிறகுகள் முளைத்து வழி தேடி அலைகிற.. பாடல் படைத்துப் பறக்கக் கற்றுக் கொள்ள பாதை நாடி வருகிற ஒவ்வொருவருக்கும்.. பிரத்தியேகமாய்.. பிரகாசமாய்.. திறந்திருக்கிறது ஒரு புத்தம்புது வானம்..
தேடித்தேடியும் கிடைத்திராதொரு புது அறிவும்.. இதற்கு முன் இல்லா அரிய வாய்ப்பும்.. மனம் நிறையும் பெரும் அங்கீகாரமும்.. எழுத்துப்பசி கொண்ட.. படைப்புத்தீ கொண்ட.. உங்களில் எழுபது பேருக்கு காத்திருக்கிறது..
ஒரு பாடல் உங்கள் வாழ்வை மாற்றலாம்.. ஒரு பாடல் உங்களை உயரே ஏற்றலாம்.. ஒரு பாடல் உங்கள் புகழாய் மாறலாம்.. ஒரு பாடல் உங்களை வரலாறாக்கலாம்..
ஒட்டுமொத்த உலகின் அத்தனைக்கோடித் தமிழ்த்திரை ரசிகர்களும் ரசிக்கும் ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் படைப்பது.. திரைத்துறையின் இருபதுக்கும் குறைவான பாடலாசிரியர்களே. காரணம் அவர்களுக்கு மட்டுமே வசப்பட்ட படைப்புச் சூட்சுமம்.
ஒரு சிலருக்கே சாத்தியப்பட்ட அந்த வித்தை, ஆர்வமும் அடிப்படைத் தகுதியும் உள்ள அனைவருக்கும் கைக்கூடும் எனில்.. அதுவும் எவரால் பாடல் இயற்றப்படுகிறதோ அந்த முன்னணிப் பாடலாசிரியர்களே அதைக் கற்றுத்தர முன்வந்தால்.. மேலும் இது தனிப்பட்ட முறையில் அல்லாது இந்தியாவின் தலைச்சிறந்த ஒரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தோடு நிகழ்ந்தால்..
பாடலாசிரியர் பிரியன் ஆகிய அடியேனது தலைமையில்.. முயற்சியில்.. ஒருங்கிணைப்பில்.. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.. உலக வரலாற்றில் முதல்முறையாக.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).
உள்ளுக்குள் உயிர்த்திருக்கும் சொந்த வார்த்தைகளைச் சந்த மெட்டுகளுக்குள் ஊற்றி, உலகறிய மேடையேற்ற விரும்பும் ஒவ்வொருவருக்குமான சரியான களம்.
இதுவரை எளிதில் அறிந்துகொள்ள இயலாதிருந்த பாடல் இயற்றும் அறிவு. ஒரு முழுமையான பாடல் இயற்றுநராய் மிளிரத் தக்க பல வாய்ப்பு. நேரடியாக பாடலாசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவம். பல்கலைக்கழக அளவில் திரைப்பாடல் இயற்றுநர் படிப்புக்கான அங்கீகாரம். இவை அனைத்தும் இதில் வசம்.
மொழியறிவு, கவியறிவு, பாட்டறிவு, இசையறிவு, படைப்பறிவு, ஆய்வறிவு எனப் பல்லறிவு வளர்த்து.. பாடல் படைப்பு, பாடல் பதிவு எனச் செயலறிவு செழித்து.. திரைத்துறை, சின்னத்திரை, ஆன்மீகப் பாடல்கள், விளம்பரக் குறும்பாடல்கள், ஆல்பங்கள் எனப் பாடல் நுழையும் அனைத்துத் துறையறிவும் அறிந்து.. இறுதியில் திறன்மிக்க முழுமையான பாடல் இயற்றுநராய் இச்சகத்தில் படைப்பெய்த இதுவே பாதை..
எஸ்.ஆர்.எம். சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரியில், வரும் ஜீலை 2013-ஆம் ஆண்டிற்கான திரைப்பாடல் இயற்றுநர் – தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்பில் இணைய விரும்புபவர்கள்.. diplyric.piriyan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய முழு சுயவிவரங்கள் (Bio-data) மற்றும் கவிதை, பாடல் என முன் படைத்த ஏதாவது ஒரு பதிவை இணைத்து அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் எழுபது நபர்களுக்கு சேர்க்கைக்கான தகவல் தரப்படும்.
மேலதிகத் தகவல்கள் தேவைப்படின், பிரத்தியேக அலைபேசி எண் 8056161139-இல் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துகள்..
வகுப்பு :
திரைப்பாடல் இயற்றுநர் – ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
(தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்புகள்)
குறைந்தபட்சக் கல்வித்தகுதி – பன்னிரெண்டாம் வகுப்பு (any group)
சிறப்புத் தகுதி – தமிழ்ப் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம்.
கூடுதல் தகுதி – கவிதை, பாடல் எனப் படைப்புப் பதிவு ஏதாவது.
இடம் – எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.
சேர்க்கை அலுவலகம் :
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்,
எஸ்.ஆர்.எம். நகர், காட்டாங்குளத்தூர் – 603203.
மேலும் விவரங்களுக்கு..
பாடலாசிரியர் பிரியன் (ஒருங்கிணைப்பாளர்) – 8056161139
மின்னஞ்சல் – diplyric.piriyan@gmail.com
.