உயிர் மூச்சாய் நின்றவளே..
உடைத்து எனைத் தின்றவளே..
விழி நழுவிச் சென்றவளே..
விதவிதமாய் கொன்றவளே..
ஆக்சிஜெனாய் உனை எண்ணி
உள்ளிழுத்து உறைந்து விட்டேன்..
மாயமதை அறியாது
மயங்கி மதி கலங்கி விட்டேன்..
வற்றாது வழியுதெந்தன்
கண்ணிரெண்டில் நீரோடை..
நீ காதலுக்கு தந்துவிட்டாய்
கார்பன்டை ஆக்சைடை…
காதல் தோல்விக் கவிதைகள் அதிகம் இல்லையென சொல்லி எழுத வேண்டுகோள் விடுத்த ஒவ்வொரு இதயதிற்க்காகவும்…
.