உன் பார்வையும் என் பார்வையும்
சந்திக்கும் புள்ளியிலா..
உன் வார்த்தையும் என் வார்த்தையும்
மரணிக்கும் மௌனத்திலா..
உன் இதயமும் என் இதயமும்
இசை மீட்டும் நிமிடத்திலா..
உன் விரலும் என் விரலும்
பிணையும் ஸ்பரிச்த்திலா..
உன் உதடும் என் உதடும்
உரசி உருகும் தருணத்திலா..
என் உடலும் உன் உடலும்
பற்றிக்கொள்ளும் நெருக்கத்திலா..
என் உயிரும் உன் உயிரும்
ஒன்றெனத் தோன்றும் உணர்ச்சியிலா..
எங்கிருக்கிறது காதல்..
இதற்குள் எங்கிருக்கிறது இந்தக் காதல்..
உண்மையில் இதில் எல்லாம் இல்லை காதல்..
இடைவெளியில்தான் இருக்கிறது காதல்..
இதன் இடைவெளியில்தான் இருக்கிறது காதல்..
ஆம்..
ஒரு பார்வைக்கும் மறு பார்வைக்கும் உள்ள
அந்த இடைவெளியில்…
ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும் உள்ள
அந்த இடைவெளியில்…
இதயமும் இதயமும் பிணையும் நிமிடதிற்க்குள்ள
அந்த இடைவெளியில்…
விரலும் விரலும் இணையும் ஸ்பரிச்துக்குள்ள
அந்த இடைவெளியில்…
உதடும் உதடும் உருகும் தருணத்திற்க்குள்ள
அந்த இடைவெளியில்…
உடலும் உடலும் கொள்ளும் நெருக்கதிற்க்குள்ள
அந்த இடைவெளியில்…
உயிரும் உயிரும் ஒன்றெனக் கருதும் உணர்சிக்குள்ள
அந்த இடைவெளியில்…
சுகமாய் முழுதாய் நிறைந்திருக்கிறது காதல்..
கைவிரல்களில் இருக்கும் இடைவெளிகளை
இன்னொரு கையின் விரல்கள் வந்து நிரப்புவதைப் போல..
ஆணுக்கும் பெண்ணுக்கும்
இயற்கையிலேயே விடப்பெற்றிருக்கும் விடுபட்டிருக்கும்
ரகசிய இடைவெளிகளை இனிக்க இனிக்க நிரப்ப
அந்த இடைவெளிகளின் மத்தியில்தான்
காதலுடன் காத்திருக்கிறது காதல்…
இந்த ரகசியம் தெரிந்தவருக்கு
மிக எளிதாய் வசமாகிறது காதல்..
உண்மையில் இந்த சூட்சுமம் உணர்ந்தவரிடம்தான்
கை கட்டி நிற்கிறது காதல்…