சாகாது உன் நினைவு…

ஜூன் 25, 2009

 

நெஞ்சுக் குழிக்குள்ளார
நெருப்பக் கொட்டி ரசிச்சவளே..

மனசுக் குளமதிர
கல்லெறிஞ்சு சிரிச்சவளே..

 

நாடி நரம்புக்குள்
ஓடியாடி திரிஞ்சவளே..

இதயத்து மத்தியில
இடம் வாங்கி அமர்ந்தவளே..

 

கண்ணு முழிக்குள்ளார
கண்டபடி நெளிபவளே..

கன்னத்தோட பாதையில
கண்ணீரா வழிபவளே..

 

கசக்கி எரிஞ்சாலும்
கலங்காது என் மனசு..

நீ வெறுத்து மறுத்தாலும்
மறக்காது என் உசுரு..

 

மூச்சு எதுக்கையிலும்
மூழ்காது என் கனவு..

என் சாவுப் படுக்கையிலும்
சாகாது உன் நினைவு…
 

.