ஈழத் தமிழச்சியின் கேள்வி…

மே 4, 2009

 

தாய் மாரில் மொகம் பொதைச்சு
முட்டிக் குடிச்ச பாலு எல்லாம்
தாய் நாட்டில் ரத்தமாத்தான்  
நிக்காம ஓடுதே..

 

பொத்திப் பொத்தி காத்து வந்த
ஒட்டுமொத்த மானமும்
துப்பாக்கி முன முன்னால
நிர்வாணமாகுதே..

 

அவமானத்துல அலைக்கழியும் எங்களுக்கு
நிவாரணம் தர்ற உலகமே..

வயித்த ஆத்த உணவு..
உடம்ப போத்த உடுப்பு..
மானம் காக்க ?

 

.