விதவிதமாய் பொய் மூட்டைகள் கட்டிக் கொண்டு
வண்டி ஏறி வீட்டு வாசலுக்கே வந்து
பிச்சை எடுக்காத குறையாய்
கெஞ்சிக் கூத்தாடி இளித்து வழிந்து
கூனிக் குறுகி காலில் விழுந்து
வாக்குப்பெட்டிக்குள் நமது முத்திரை விழுவதற்க்காய்
புதிது புதிதாய் புளுகி
நகரை வலம் வரும்
நமது நாகரீக அரசியல்வாதிகளின் தேர்தல்…
ஆளும் எதிர் கட்சிகள் மாறி மாறி
தத்தம் ஊழல்களை உலகுக்கு எடுத்துக்காட்டி
பதுக்கிய சாக்கடைத்தனங்களை எல்லாம்
மொத்தமாய் சேர்ந்து தூர்தல்…
பின் ஏதோவொரு கட்சி
அழகிய பொய்கள் அதிகம் சொல்லி
அறிக்கைகள் தந்து ஆட்சிக்கு வந்துவிட்டபின்
அத்தனை மக்களையும் அப்படியே வார்தல்…
இந்த முறையாவது நல்லது நடக்குமாவென
ஒவ்வொரு முறையும் ஏங்கி
எதுவும் நடக்காது
பின் வழக்கமான வாழ்வை தொடங்கும்
என் சக மனிதா…
நீ இனியாவது நினைத்தது நடக்குமாவென
குலதெய்வத்தை வேண்டி ஊரோடு சேர்ந்து தேர் தள்…
4:07 பிற்பகல் இல் ஜூலை 9, 2009 |
Excellent poem , Ungal kavidhai karpanaiyaai illamal Naatu nadappai appadiye kan munnal kaatugiradhu.
All the best sir.