April 29, 2009
நாங்கள் மானம் கெட்டு
வீடுகள் விட்டு
உறவுகள் கண்முன் சாவது கண்டு துடிதுடித்து
உங்கள் துணை வேண்டி கரங்கள் நீட்டுகிறோம்…
நீங்களோ ஐயோ பாவம் என உச்சுக் கொட்டி
எங்கள் கைகளில் திணிக்கிறீர்கள் சோத்து மூட்டைகளை..
எங்களுக்கு வயிற்றுப் பசி பெரிதில்லை சகோதரா..
மானப்பசி.. இனப்பசி.. இதயப்பசி பெரிது..
ஊடகங்களில் எங்கள் நிலை பார்த்து
நிவாரண நிதியும் சோத்து மூட்டையும்
தருவது போதும்..
எம் கண்களில் கசிகிற
உரிமைகளுக்கான பசியைப் பார்..
இனம் அழியும் கோபமும் வெறுமையும் பொங்கும்
கொடும் பசியைப் பார்..
நம்மினம் காக்க வலிமை தா தமிழா..
தமிழினம் தரணியாளும் நாள் வரும் தமிழா…
1 மறுமொழி |
Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
April 25, 2009
விதவிதமாய் பொய் மூட்டைகள் கட்டிக் கொண்டு
வண்டி ஏறி வீட்டு வாசலுக்கே வந்து
பிச்சை எடுக்காத குறையாய்
கெஞ்சிக் கூத்தாடி இளித்து வழிந்து
கூனிக் குறுகி காலில் விழுந்து
வாக்குப்பெட்டிக்குள் நமது முத்திரை விழுவதற்க்காய்
புதிது புதிதாய் புளுகி
நகரை வலம் வரும்
நமது நாகரீக அரசியல்வாதிகளின் தேர்தல்…
ஆளும் எதிர் கட்சிகள் மாறி மாறி
தத்தம் ஊழல்களை உலகுக்கு எடுத்துக்காட்டி
பதுக்கிய சாக்கடைத்தனங்களை எல்லாம்
மொத்தமாய் சேர்ந்து தூர்தல்…
பின் ஏதோவொரு கட்சி
அழகிய பொய்கள் அதிகம் சொல்லி
அறிக்கைகள் தந்து ஆட்சிக்கு வந்துவிட்டபின்
அத்தனை மக்களையும் அப்படியே வார்தல்…
இந்த முறையாவது நல்லது நடக்குமாவென
ஒவ்வொரு முறையும் ஏங்கி
எதுவும் நடக்காது
பின் வழக்கமான வாழ்வை தொடங்கும்
என் சக மனிதா…
நீ இனியாவது நினைத்தது நடக்குமாவென
குலதெய்வத்தை வேண்டி ஊரோடு சேர்ந்து தேர் தள்…
1 மறுமொழி |
Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
April 18, 2009
அன்றாட வாழ்வில்
அவ்வப்போது கொஞ்சம்
தனித்திருக்க பழகிக் கொள்ளுங்கள்…
தனிமை அமைதியைத் தரும்..
அமைதி அறிவைக் கிளரும்..
அறிவு உண்மைகளை உணர்த்தும்..
உண்மைகள் உங்களை திருத்தும்…
அதனால் வாழ்க்கை தெளிவாகும்..
ஆதலால் எங்கும் நில்லாத
அன்றாட வாழ்வில்
அவ்வப்போது கொஞ்சம்
தனித்திருக்க பழகிக் கொள்ளுங்கள்…
Leave a Comment » |
Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
April 14, 2009
உடலை பிசைந்து தின்னும் காமம்
நாகரீகம் கருதி
காதலென்னும் பெயர் சூட்டிக் கொள்கிறது…
உயிரை உன்னதமாக்கும் காதலோ
தன் பெயர் களங்கமாவது கண்டு
செய்வதறியாமல் திகைக்கிறது…
எந்த திசையாய் இருந்தால் என்ன
விடியல் என்பது கிழக்கில்தான்..
எத்தனை களங்கம் செய்தாலும்
காதல் என்றும் புனிதம்தான்…
Leave a Comment » |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kaathal Kavithaigal Kavingar Piriyan Kavithaigal Kavith, Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
April 10, 2009
நான் நானாக இருப்பதை
எப்போதும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது
இந்த உலகம்..
என் இஷ்டத்திற்கு
நான் வாழ நினைக்கும் வாழ்கையை
அதன் இஷ்டத்திற்கு
வளைக்க முயற்சிக்கிறது அது..
சில நேரங்களில் கெஞ்சிப் பார்க்கிறது..
சில நேரங்களில் கொஞ்சிப் பார்க்கிறது..
அழுகிறது.. சிரிக்கிறது..
சந்தர்ப்ப சூழ்நிலைகளில்
மிரட்டிக் கூட பார்க்கிறது..
எப்படியாவது அதன் வலைக்குள் என்னை
சிக்க வைக்க முயற்சிக்கிறது..
நானும் சிக்குவதாயில்லை..
அதுவும் விடுவதாயில்லை..
இது என்றும் முடிவதாயில்லை….
Leave a Comment » |
Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
April 6, 2009
காற்றடித்து எழுகிற காகிதமும்..
சிறகு விரித்து திரிகிற பறவையும்..
பறப்பதால் ஒன்றாகுமா என்ன…
நொடிப் பொழுதில் பற்றி
எரிந்து அணைகிற காமமும்..
ஜென்மம் தாண்டி
நிலைத்து வாழ்கிற காதலும்..
சுகத்தால் ஒன்றாகுமா என்ன…
பொய்கள் இங்கு பிழைப்பதில்லை..
மெய்கள் என்றும் அழிவதில்லை…
Leave a Comment » |
Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
April 2, 2009
உள்ளே பொத்திப் பொத்தி வைத்து
ஒரு நாள் அடக்க முடியாமல் வெடிக்கும்
எரிமலையாகவும் இருக்க வேண்டாம்…
எதையும் அடைத்து வைக்காமல்
எப்போதும் கொட்டித் தீர்த்து விடுகின்ற
அருவியாகவும் இருக்க வேண்டாம்…
எல்லைகள் ஏதுமற்ற
வானமே சொந்தமாய் இருந்தாலும்..
இஷ்டம் போல சுற்றித் திரிய
சுதந்திர சிறகுகள் இருந்தாலும்..
வரம்பு மீறாத பறவையைப் போல
என்றும் மகிழ்ச்சியாய் வாழ்தல் போதுமானது…
உண்மையில் அதுதான் சுகமானது….
Leave a Comment » |
Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.