நவம்பர் 29, 2008
உன் உச்சந்தலையில் தொடங்கி
மெல்ல மெல்ல முத்தங்களால்
இறங்கிக் கொண்டிருக்கும்
என் மீசை உன் மார்பு பள்ளத்தில்
மிருதுவாய் குத்த…
அந்த சுகம் தாங்காமல்
என்னை இழுத்துக் கட்டிக்கொள்கிறாய் இறுக்க…
உன் உடலெங்கும் மெதுவாய்
குத்திக் குத்தி சுகம் எடுக்கும்
இந்த மீசையையும் தாடியையும்
நான் எதற்காய் வளர்க்கிறேன் என
இப்பொழுது புரிந்திருக்கும் உனக்கு…
எனக்கு தெரியும்..
இனி ஒரு போதும் சொல்ல மாட்டாய்…
மீசை தாடியை எடுத்துவிடுங்கள் என்று…
2 மறுமொழிகள் |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
நவம்பர் 29, 2008
நீ என்னருகில் இல்லாத
நிமிடங்களில் எல்லாம்…
என் இதயம்
ராட்சச அலைகளாய் உருமாறி…
நினைவுப் பாறைகளின் மீது
நில்லாமல் மோதி மோதி
சத்தமிட்டுக்கொண்டே இருக்கின்றது…
கட்டுப்படுத்த முடியாத காதலோடு…
Leave a Comment » |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
நவம்பர் 25, 2008
உன்னில் இணைந்து நான்
வாழ்கின்ற நாட்கள்…
ஜனனத்தின் உச்சம் !
உன்னை பிரிந்து நான்
வாழ்கின்ற நாட்கள்…
மரணத்தின் மிச்சம் !
Leave a Comment » |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
நவம்பர் 25, 2008
தொலைப்பேசியில்தான் என்றாலும்
உன் முத்தங்கள் வாங்காது
நகர்வதில்லை என் இரவுகள்…
சில சமயங்களில்
பக்கத்தல் ஆட்கள் இருப்பதற்காகவும்
பொது இடமென கருதியும்…
நீ முத்தங்கள் தராமல் விட்டு விட்ட
இரவுகளின் சிறகுகள்
சருகுகளாய் உதிர்ந்து போய்விடுகின்றன…
இனியாவது என் இரவுகளும் தூக்கங்களும்
கட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க…
மறவாமல் மறுக்காமல் தந்துவிடு
எனக்கு மட்டுமேயான
உன் இரவு நேர முத்தங்களை…
Leave a Comment » |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
நவம்பர் 23, 2008
உன்னை நானும் என்னை நீயும்
காணக் கிடைக்கும் நாட்களில்…
இருவரும் சந்தித்துக் கொண்ட
முதல் நொடியில் இருந்து
நகர்கின்ற அத்தனை நொடிகளும்…
சிரித்து சிரித்து
ரசித்து ரசித்து கடந்தாலும்…
நேரமாகிப்போய் பிரிய முற்படும்
அந்த கடைசி நொடியில்…
கண்ணுக்குள் திரண்டு நிற்கும்
கண்ணீரின் துளியில்தான்
உணரப்படுகின்றது…
நம் காதலின் ஆழமும் வலியும்…
Leave a Comment » |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
நவம்பர் 23, 2008
ஒரு அதிகாலை கைப்பேசி உரையாடலின் பொழுது
உனது நேற்றைய இரவுக் கனவில்
நான் வந்த செய்த குறும்புகளை எல்லாம்…
ஒன்றுகூட விடாமல் நிறுத்தமின்றி
சின்னப் பிள்ளை கதை சொல்வதைப்போல…
ரசித்து ரசித்து விவரிக்கும்
உன் அழகிய பேச்சை அணுவணுவாய் உள்வாங்கி
” உம்…” கொட்டியபடியே கேட்டுக்கொண்டிருக்கின்றேன்…
உதித்துக்கொண்டிருக்கும் சூரியன்
முழுதாய் கிடக்கிறது என் காலடியில்…
1 மறுமொழி |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
நவம்பர் 19, 2008
சில்லென்ற காற்றோடு
மெலிதாய் தூறிக்கொண்டிருக்கும்
மெல்லிய மழைத்துளிகளை…
வாஞ்சையோடு உள்ளங்கைகளில்
ஏந்திக்கொண்டிருக்கும்
இந்த ஈர நிமிடத்தில்
எதேட்சையாய் கவனித்தேன்…
என் உள்ளங்கைக்குள்
உருள்கின்ற துளிகளில்
உன் முகம் தெரிவதை…
Leave a Comment » |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
நவம்பர் 13, 2008
அது ஒரு அழகிய பூக்காடு…
கடவுளின் ரகசியமும் அதிசயமும்
நிறைந்திருக்கும் வாசனையுள்ள பூக்களின் வனம்…
ரோஜா… மல்லிகை… முல்லை… என
எல்லா பூக்களும்
ஒரே இடத்தில பூத்திருப்பது
நம்பமுடியாத ஆச்சர்யம்தான்…
பலவித வண்ணங்களால் வாசங்களால்
வனப்புகள் சிந்தியிருக்கும்
அந்த அழகிய தோட்டத்திற்கு
எப்போதும் வருவார்கள் எல்லோரும்….
தங்கள் காதலிகளுக்கான
பல வண்ண ரோஜாக்களை
விரும்பி பார்த்தும்
பறித்துக்கொண்டும் இருந்தவண்ணம்
அந்த ரோஜாக்களையே
சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள்
இளைஞர்கள் எல்லாம்…
தங்கள் கனவுகளுக்கான
புத்தம்புதிய விடைகளுக்காக
அன்பு மனைவிகளுக்கான மல்லிகைகளை
அர்த்தத்தோடு பறித்துக் கொண்டிருக்கிறார்கள்
பாசமான கணவர்கள் எல்லாம்…
தங்கள் வேண்டுதல்களுக்காக
காத்திருக்கும் கடவுள்களுக்காக
முகை விரித்த முல்லைகளை
பக்தியோடு பறித்துக் கொண்டிருக்கிறார்கள்
வயதான பெரியவர்கள் எல்லாம்…
அத்தனை பூக்களையும்
எந்தவித பேதமுமின்றி
ஓடியோடி மடியில்
அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்
குட்டிக் குழந்தைகள் எல்லாம்…
அத்தனை பேரின் அரவணைப்பினால்
மகிழ்ச்சியும் மலர்ச்சியும் கொண்டு
திறந்திருக்கும் பூக்களுக்கு இடையில்..
யாரும் தீண்டாத
அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்காத
ஒரு இடமும் களை மண்டிக் கிடந்தது…
அது வாசமில்லா காகிதப்பூக்களின் இடம்…
குட்டிக்குட்டியாய் தினமும்
தனது பூக்களை திறந்து வைத்தபடி..
இன்றாவது தங்களைப் பார்க்க.. தொட.. சூட..
யாராவது வருவார்களா என
ஏக்கத்தோடு காத்திருக்கின்றன
அந்த காகிதப்பூக்கள்
எப்போதும் எதிர்பார்த்தபடி…
மணப்பதில்லை என்றாலும் இன்னும்
அழகாய்த்தான் இருக்கின்றன அவை…
நம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப்போல !
ஆம்…
பூமியென்னும் பூக்காட்டில்
ரோஜா… மல்லிகை… முல்லைப் பூக்களைப்போல
வண்ண வண்ணமாய்
வித வித வாசங்களோடு
சுட்டித்தனம் செய்து சுற்றித் திரியும்
குழந்தைகளுக்காக
அவர்களை கொஞ்சல்களால் சூடிக் கொள்வதற்காக
நிறையப்பேர் இருக்கிறார்கள்…
அறிவு வளர்ச்சி என்னும்
வாசனை இல்லாத ஒரே காரணத்தால்
மனவளர்ச்சி குன்றிய காகிதப்பூக்களை
அன்பால் சூடிக்கொள்ள வருவதில்லை யாரும்…
என் இறைவா…
இனியாவது இந்த காகிதப்பூக்களுக்கு
நல்ல மணம் கொடு !
என் மனிதர்களுக்கு
நல்ல மனம் கொடு !
பிரியமான இதயங்கள் அனைத்திற்கும் பிரியனின் பிள்ளைகள் தின நல்வாழ்த்துக்கள்….
குழந்தைகளுக்கான நாளில் குணத்தோடு கொஞ்சம் சிந்திப்போம்………….
குழந்தை மனம் வேண்டி…
பிரியமுடன்…
பிரியன்…
1 மறுமொழி |
Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
நவம்பர் 7, 2008
உடையில்லா என் வெற்று மார்பில்
உன் கன்னத்தின் வெப்பம்
இறங்க இறங்க
மயங்கி கிறங்கி
கண்மூடிக் கிடக்கும் பொழுதுகளில்…
ஒரு அங்குலமும் நகரக் கூடாதென
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டபடி இருக்கிறேன்
இந்த பாழாய் போன காலத்திடம்…
Leave a Comment » |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
நவம்பர் 7, 2008
அடுத்த நொடி
நீ என் அருகில் இல்லை என்பதை
என்ன சொன்னாலும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறதடி என் இதயம்…
சட்டென என்னை
கடந்து நீ சென்றுவிட்டாய்…
ஊமையாய் நிற்கிறேன் நான்
சாலையின் ஓரத்தில்…
நீ என்னை பிரியும் அந்த நொடியில்
இதோ இந்த வானம் கூட
மழையாய் மாறி
அழுகிறது பாரடி எனக்காக…
Leave a Comment » |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.