சுவாரஸ்யமாக என்னுடன் நீ
பேசிக்கொண்டிருக்கும் வேளையில்…
சட்டென ஏதும்
வார்த்தைப் பிழை நேர்ந்தால்…
மென்மையாய் நுனி உதட்டை கடித்தபடி…
மெதுவாய் தலையில் தட்டிக்கொள்வாய்…
பின் மீண்டும் சுவாரஸ்யமாகும்
பேச்சுக்கிடையில்…
அடுத்து வரப்போகும்
உன் செல்லப் பிழைகளுக்காகவே
ஆவலுடன் காத்திருப்பேன் நான் !
அன்று சனிக்கிழமை, ஆகஸ்ட் 30th, 2008 நேரம் 7:55 பிற்பகல் கீழ் Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்
7:38 மு.பகல் இல் செப்டம்பர் 5, 2008 |
good
beautiful thoughts priyan