ஜூன் 23, 2008
வண்ணக் கதிர் வானம் விலகிட
வண்டித் தடம் பதிந்து வழிமாறும்
வெயிலின் பயணம் !
மஞ்சள் பூசும்
மாலைநேர மர இடுக்குகளில்
மெல்ல வழிந்துகொண்டிருக்கும்
இருளின் ஜனனம் !
தட்டுத் தடுமாறி
விட இடம் தேடி
அலைந்துகொண்டிருக்கும்
சில பறவைக் கூட்டம் !
இல்லம் சேர விரைந்துகொண்டிருக்கும்
வண்டிமாடுகளோடு…
அவைகளின் மணியோசைகளுக்கு
அழகாய் தலையாட்டியபடி…
இருட்டும் சேர்ந்து அமர்ந்து
பயணம் செய்துகொண்டிருக்கும்…
ஒளிவீசிக்கொண்டிருக்கும்
அந்த சிவந்த லாந்தர் விளக்கை
முறைத்தபடியே…
1 மறுமொழி |
Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
ஜூன் 23, 2008
எதிர்பாராமல் என்னை
எதிரில் கண்டு…
ஆச்சர்யத்தில் விரியும்
உன் அகண்ட விழிகளில்
அடக்க முடியாத
சந்தோசத்தை நிரப்பிக்கொண்டு…
மலர்ந்திருக்கும் மகிழ்ச்சியை
மனதிற்குள் மறைத்துக்கொண்டு…
இயல்பாய் கேட்பதுபோல
“ என்ன இந்த பக்கம் “ என்கிறாய் !
நான் உன் முகத்தையே
உற்றுப்பார்க்க…
வெட்கம் சிந்தும் சிரிப்புடன்
சட்டென வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாய் !
அடியே…
நீ திரும்பிய திசையெங்கும்
திணறிச் சிதறுகிறது
என்மேல் நீ கொண்ட காதல் !
Leave a Comment » |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Kavithaigal, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
ஜூன் 23, 2008
பனித்துளிகளை வாரி இறைத்து
உடல் நனைய உடை உடுத்தி
குளித்த வாசனையுடன்
நீ வாசலில் இடும் கோலத்தைக் காணவே
சீக்கிரமாய் வந்துவிடுகிறது இந்த விடியல்…
நிலவினை அரைத்து
நீள்வட்டக் கோடுகளாக்கி
விண்மீன்கள் பறித்து
புள்ளிகளாய் வைக்கிறாய் கோலத்தில்…
ஒன்றுமில்லை வானத்தில் !
Leave a Comment » |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.
ஜூன் 23, 2008
உன் உறக்கத்தில் மெல்ல நுழையும்
என் அழகான கனவுகள் இளைப்பாற
உன் தலையணையின் ஓரத்தில்
எனக்கும் கொஞ்சம் இடம் விட்டுத் தூங்கு…
நீ விடும் சுவாசத்தினால்
உன் தனி வாசத்தினால்
அது இன்னும் அழகாகக்கூடும்
என்னைப் போல !
1 மறுமொழி |
Kaathal Kavithaigal, Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... | குறிச்சொற்கள்: Kaathal Kavithaigal, Kavithai Varigal, Kavithaigal, Lyricist Piriyan, Piriyan, Piriyan Varigal, Poet Piriyan, Tamil Kavithaigal |
நிரந்தர பந்தம்
piriyan பதிப்பித்தது.