எனது பாடல்கள் பற்றி

 

 

அஞ்சாதே… 

” மனசுக்குள் மனசுக்குள் புது மழை விழுகிறதே !
முழுதாய் நனைந்தேன் !

கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே !
உனை நான் சுமந்தேன் ! “

 

காதலில் விழுந்தேன்… 

” புயலாய் புறப்படு
வெடியாய் வெடித்திடு
     உனக்கு தடை இல்லை உலகிலே !

திசைகள் பொடிபட
எதிரி பயப்பட
     உனக்கு மேற்கும் விடியலே… “

 

  பந்தயம்… 

” தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
முத்தச் சூட்டில் என்னை நீ சுட்டுக் கொள்வாயோ !

தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
காட்டுத் தீயாய் என்மேல் நீ பற்றிக் கொள்வாயோ ! “

 

ரசிக்கும் சீமானே… 

” கோடிக் கோடி மின்னல்கள்
கூடி பெண்மை ஆனதே !

மூடி மூடி வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே ! “

                                                                         என்ற வரிகளோடும்….

 

” நான் உன்னைப் பார்க்கும் நேரம்
நீ மண்ணைப் பார்ப்பதேனோ !

            உன் கண்ணை உற்றுப் பார்த்தால் சரியோ ! “ 

                                                                    என்ற வரிகளோடும் தொடங்குகின்றன பாடல்கள்…

 

 

 

௮… ஆ…இ… ஈ…

“ ௮ ஆ இ ஈ சொல்லித் தருதே வானம்
அதில் பட்டாம்பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்… “ 

                                 

 

தநா 07 அல 4777…

” சொர்க்கம் மதுவிலே
சொக்கும் இரவிலே

வாம்மா அருகிலே
நீ காட்டுத் தீப்போலே… “

              

 

நினைத்தாலே இனிக்கும்… 

“ செக்சி லேடி.. கிட்ட வாடி..
போதை பாதி.. ஆசை மீதி.. மோதி மோதி.. “

 

 

உத்தமபுத்திரன்..

“உசுமுலாரசே உசுமுலாரசே..

செதுக்கி எடுத்த செலையப்போல்
குலுக்கி தளுக்கி நிக்கிறியே..

வளைஞ்சு நெளிஞ்சு குழைஞ்சுதான்
வயசுல தீ வைக்கிறியே.. “
 

 

இவை சில உதாரணங்கள்… இன்னும் நிறைய 70-க்கும் மேற்பட்ட  படங்கள், 150-க்கும் மேற்பட்ட பாடல்கள்… என மெல்ல மெல்ல எழுந்து கொண்டிருக்கிறேன்…

இன்னும் செல்லவேண்டி இருக்கிறது நிறைய தூரம்…
அதற்காய் காத்திருக்கிறது காலம்…

பிரியமுடன்…
பிரியன்…

 

9 Responses to எனது பாடல்கள் பற்றி

  1. வாழ்த்துக்கள் தொடருங்கள்

    வாய்ப்பு கிடைத்திருகிறது
    இனி வழியா இல்லை

    பாடலாசிரியரான உங்களை
    வலைப்பூவில் சந்தித்ததில்
    சந்தோசம்

    என்றும் தமிழ் வாழனும்

  2. geetalakshmi says:

    வாழ்த்துக்கள் தொடருங்கள்

  3. piriyan says:

    மிக்க மகிழ்சி…

    விமர்சனங்களுக்கு நன்றிகள்…

  4. maherajsaro says:

    தாங்கள் இன்னும் பல வெற்றிகளை… இரு துறைகளிலும் பெற தமிழ் உள்ளங்களின் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்….

    நேரம் கிடைத்தால்…
    (சமீபத்தில் இலங்கை நிகழ்வுகளுக்காக நான் எழுதிய வரிகளை இங்கு வாசிக்கவும்…)

    http://whereweliving.blogspot.com/2008/10/blog-post.html

    எதுவும் வேண்டாம்…. (இலங்கை தமிழர்களின் நிலை கண்ட பின்பு…)

  5. thiruvenkat2001 says:

    Sorry for typing in English , Please tell me how to change settings to type in Tamil.
    Ur poems are awesome and touching. Please one request write more poems touching the heart of youngsters like me and they should build up Tamil unarvu in them as many are forgetting their own language and praising the other languages. I am also a budding poet i can say ,right now i am in Dundee(Scotland) we Tamilians are planning t o start a tamilar sangam in that we are planning to improve Tamil feelings so if u can find time please let us know what we can do.It would be great pleasure for us if u write a poem based on this for us

    Thanking you
    Thiru

  6. padmahari says:

    வாழ்த்துக்கள் பிரியன். உங்கள் கவிதைப் பயணத்தை வலையில் கவிதையாய் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்! சினிமாவில் மேலும் பல வெற்றிகள் உங்களை வந்து சேரட்டும்! நன்றி.
    http://www.padmahari.wordpress.com

  7. கூட்டாஞ்சோறு, தாவணி பெண்கள் என்று கிராமிய மணம் ஒரு புறம். கள்ளமில்லா மனதில் கவலை ஒருபோதும் இருக்காது, ஒவ்வொரு நொடிகளும் நமக்காய்ப் பிறந்தது முழுசாய் அனுபவி தோழா.. முதலிய எழுச்சி மிகுந்த வரிகள் மறுபுறம் என்று ரசிக்கும்படியான பாடல் அ ஆ இ ஈ சொல்லத்தந்தது வானம் பாடல். மிகவும் ரசித்தேன்.

    பாடல்களின் வ்ரிகள் முழுமையும் பதிவு செய்யலாமே பிரியன்?

    மற்ற பாடல்களையும் கேட்ட பின் தொடரும் விமர்சனம்…
    வாழ்த்துகள் பிரியன்.

மறுமொழி இடுக

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.